Home இலங்கை சமூகம் முச்சக்கரவண்டிகளில் சாகசம் காட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

முச்சக்கரவண்டிகளில் சாகசம் காட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

0

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி, பணத்திற்காக முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 9 முச்சக்கர வண்டிகள் மற்றும் 9 சாரதிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நீதிமன்றில் முன்னிலை

இவ்வாறு கைதானவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, முகத்துவாரம், கெரவலப்பிட்டிய மற்றும் மாபோல பிரதேசங்களை சேர்ந்த கொண்ட 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் றாகம பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

NO COMMENTS

Exit mobile version