Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காதோர்: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காதோர்: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

0

இலங்கையில் நேற்றையதினம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த வாக்களர்களில் 3,820,738 பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட 17,140,354 வாக்காளர்களில், 79.46% மட்டுமே கலந்து கொண்டுள்ள நிலையில், மொத்தம் 13,619,916 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் 97.8% செல்லுபடியாகும் வாக்குகள், 13,319,616 என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்

எவ்வாறாயினும், 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், இது மொத்த வாக்குகளில் 2.2% ஆகும்.

இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க முன்னிலை வகித்து வந்ததுடன், அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச பின் தொடர்ந்து வந்தார். 

NO COMMENTS

Exit mobile version