Home இலங்கை சமூகம் மூதூர் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியவர்கள் கௌரவிப்பு

மூதூர் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியவர்கள் கௌரவிப்பு

0

Courtesy: H A Roshan

யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி புறப்பட்ட பேருந்து கடந்த 19ஆம் திகதி மூதூர் இறால்குழி கங்கை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியது.

பொது அமைப்புகள்

இந்நிலையில்  விபத்தின் போது உடனடியாக செயற்பட்ட பொது அமைப்புகளையும், தனிநபர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் பதில் பிரதேச செயலாளர்  எம்.எச். முகம்மது கனியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (22) பிரதேச செயலக வளாக முன்றலில் நடைபெற்றுள்ளது.

இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மத குருமார்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version