Home இலங்கை சமூகம் மாங்குளம் பகுதியில் நள்ளிரவில் பேருந்து விபத்து: மூவர் பலி இருவர் காயம்

மாங்குளம் பகுதியில் நள்ளிரவில் பேருந்து விபத்து: மூவர் பலி இருவர் காயம்

0

முல்லைத்தீவு (Mullaitivu) – மாங்குளத்தில் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று (26.6.2024) இரவு மாங்குளம் (Mangulam) பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறம் லொரி ஒன்று மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மாங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version