Home இலங்கை சமூகம் வவுனியாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் மாயம்

வவுனியாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் மாயம்

0

வவுனியா (Vavuniya), கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் மனைவி ஒருவரையும் அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 32 வயதான அ.அபிராமி என்னும் பெயருடைய குறித்த மனைவி அவரது பிள்ளைகளான கம்சனா (வயது 11) மற்றும் சன்சிகன் (வயது 8) ஆகிய இருவரையும் கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இருப்பினும், குறித்த இரு மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை என்றும், மனைவியும் வீடு திரும்பவில்லை என்றும் அத்தோடு தானும் உறவினர்களும் பல இடங்களிலும் தேடிய நிலையில் அவர்கள் மூவரும் வீடு திரும்பவில்லை என கணவன் தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் முறைப்பாடு 

இதனையடுத்து, மனைவியையும், இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான தகவல் கிடைத்தால் 0765273860 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது வவுனியா காவல்துறையினருக்கோ தெரியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/three-from-one-family-in-vavuniya-is-missing-1720375175

NO COMMENTS

Exit mobile version