Home இலங்கை சமூகம் இன்று பிற்பகல் நடந்த அனர்த்தம் : தொடருந்தில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

இன்று பிற்பகல் நடந்த அனர்த்தம் : தொடருந்தில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

0

இன்று (12) பிற்பகல் தொடருந்தில் மோதி குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.மாத்தறையில்(matara) இருந்து கொழும்பு (colombo)நோக்கி பயணித்த தொடருந்தில் மோதியே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த மூவரும் களுத்துறையை சேர்ந்தவர்கள்

உயிரிழந்த மூவரும் களுத்துறை(kalutara) தெற்கு ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை திருகோணமலை(trincomale) – சீனக்குடா பகுதியில் நேற்று (11) பிற்பகல் தொடருந்து மோதி தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலையிலும் தாய்,மகன் பலி

சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு தொடருந்து பாதையை கடக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சீனக்குடா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

NO COMMENTS

Exit mobile version