மொனராகலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (17) இடம்பெற்றுள்ளது.
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில், தனமல்வில காவல் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட கித்துல்கோட்டை பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “இந்த விபத்தில் பேருந்து, வேன் மற்றும் கார் ஆகியவை மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் யாருக்கும் பாரிய சேதம் ஏற்படவில்லை என்ற போதிலும், வாகனங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் தனமல்வில காவல்துறை தலைமையகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
