யாழில் 530 மில்லிகிராம் ஹெரோயினுடன்
மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (14) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – திருநகர் பகுதியில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இளைஞர்கள் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம் காவல் நிலைய
போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
