கொழும்பில் முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் பத்தரமுல்லை – அக்குரேகொட, அருப்பிட்டிய, 10ஆவது லேன் பகுதியில் இன்றைய தினம்(18) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது, 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், முச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகிலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் தொடர்பில் வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.