Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் கடத்தல்: ஒருவர் கைது

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் கடத்தல்: ஒருவர் கைது

0

கிளிநொச்சி (Kilinochchi) – கிளாலி பகுதியில் உரிய அனுமதிப்பத்திரமில்லாமல் வெள்ளை மணல் கடத்தி வந்த கனரக வாகனமொன்று யாழ். சாவகச்சேரி பகுதியில் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (21) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த சாரதியே கைது
செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகள் 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர்
அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/tipper-smuggled-sand-without-a-permit-kilaly-1737458455

NO COMMENTS

Exit mobile version