Home இலங்கை அரசியல் தமிழக தலைவர்களை சந்திக்க இந்தியா பயணமாகும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

தமிழக தலைவர்களை சந்திக்க இந்தியா பயணமாகும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

0

இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டி தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இவ்விடயங்களை தெளிவுபடுத்த சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் இவ்வாரம் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இலங்கை மீது அழுத்தம்

இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல்
யாப்பினை கொண்டு வருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும்.

அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை
ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள்
குரல்கொடுக்க வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளது.

இந்நோக்கத்திற்காக தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இவ்விடயங்களை
தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று
அரசியல் தலைவர்களுடன் இவ்வாரம் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி)
உத்தியோகபூர்வ பேச்சாளர்
ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர்
ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version