Home இலங்கை அரசியல் போராட்டங்களில் பலரது கவனத்தை பெற்றுள்ள “AKD GO கம” பதாகை

போராட்டங்களில் பலரது கவனத்தை பெற்றுள்ள “AKD GO கம” பதாகை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ரணில் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்கள் “AKD GO கம” என்ற பதாதைகளை தாங்கியவண்ணம் போராட்டங்களில் ஈடுபட்டு வருதை காணக்கூடியதாகவுள்ளது.

 பலரது கவனம்

மேலும் “COMEBACK RANIL” என்ற வாசகமும் பலரது கவனத்தை பெற்றுவருகின்றது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினரும் கொழும்பில் ஒன்று திரண்டு எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு விசாரணை சிறிது நேரத்திற்கு முன்பு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் Zoom தொழில்நுட்பம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version