Home இலங்கை சமூகம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு

0

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.

பலத்த காற்று வீசக்கூடும்

மாத்தளை, அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1719062134

NO COMMENTS

Exit mobile version