Home இலங்கை சமூகம் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

0

நாட்டின் தென்மேற்குப் பகுதியின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு நாளை பிற்பகல் 2.00 மணி வரை செல்லுபடியாகும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 சிவப்பு எச்சரிக்கை

அதற்கமைய, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

அதேவேளை, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version