Home இலங்கை சமூகம் 2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை: பொது மக்களுக்கு எச்சரிக்கை

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை: பொது மக்களுக்கு எச்சரிக்கை

0

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி (Galle) மற்றும் மாத்தறை (Matara) மாவட்டங்களிலும் இன்று (21) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணபாதையில் மாற்றம் – ஸ்ரீலங்கன் விமான சேவை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மின்னலின் ஏற்படக்கூடிய விபத்து

ஊவா மாகாணம் மற்றும் அனுராதபுரம், வவுனியா (Vavuniya) மற்றும் மன்னார் (Manner) மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி (Galle) மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலின் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.

கனடா விசிட்டர் விசா – தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

ஈரானின் அடுத்த திட்டம் மூன்றாம் உலகப் போருக்கான நகர்வு: நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   

NO COMMENTS

Exit mobile version