Home இலங்கை சமூகம் உறைபனி ஏற்பட வாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உறைபனி ஏற்பட வாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

மேற்கு மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரத்தில் மூடுபனியுடன் கூடிய வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், தீவின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று

அத்தோடு, அதிகாலையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் குளிரான வானிலை எதிர்பார்க்கப்படுவதுடன் அதிகாலையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version