Home இலங்கை குற்றம் மீண்டுமொரு சித்திரவதை முகாம்.. சிஐடியால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

மீண்டுமொரு சித்திரவதை முகாம்.. சிஐடியால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

0

களனி – கோனாவல பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு சித்திரவதை முகாமை பேலியகொட பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த சித்திரவதை முகாமின் செயற்பாட்டாளர்கள் துபாயிலிருந்து கம்பஹா மாவட்டத்திற்கு போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாக குற்றபுலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சித்திரவதை முகாம் 

குறித்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை கடனாக வழங்கி, பின்னர் கடனை செலுத்தாத இளைஞர்களை இந்த சித்திரவதைக் கூடத்திற்கு அழைத்து வந்து கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

சிறிது காலமாக அவர்கள் செய்து வரும் இந்த கொடூரமான செயல் குறித்து அப்பகுதிவாசிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பேலியகொட பொலிஸார் அப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

இதன்போது, சித்திரவதை செய்யப்பட்டிருந்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்ய முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மூன்று நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பேலியகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ளவர்கள்… 

போதைப்பொருள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய இளைஞர்களை அந்தப் பகுதியில் உள்ள காலியான நிலத்திற்கு அழைத்து வந்து பின்னர் சித்திரவதை செய்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

குறித்த குத்தகைக்கு விடப்பட்ட நிலப்பகுதி தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு தொழிலதிபர்களுக்கு சொந்தமானது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டு தொழிலதிபர்களுக்கும் இது தொடர்பாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.  

Source: https://tamilwin.com/article/torture-camp-linked-to-drug-in-kelaniya-sri-lanka-1748609881

NO COMMENTS

Exit mobile version