Home இலங்கை சமூகம் இலங்கை வந்த வெளிநாட்டு பெண் பரிதாபமான முறையில் மரணம்

இலங்கை வந்த வெளிநாட்டு பெண் பரிதாபமான முறையில் மரணம்

0

சுற்றுலாவுக்காக இலங்கை வந்த 25 வயதான வெளிநாட்டு யுவதி ஒருவர் பொல்கொட, பெந்தோட்டை கடற்பரப்பில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஜோர்தான் நாட்டை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 

சுற்றியிருந்தவர்களால் கரைக்கு கொண்டு வரப்பட்ட அவர், பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version