Home இலங்கை சமூகம் கட்டுநாயக்கவில் இரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் சிக்கிய வர்த்தகர்

கட்டுநாயக்கவில் இரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் சிக்கிய வர்த்தகர்

0

சுமார் இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத் தூளை (கோல்ட் பவர்) சட்டவிரோதமான முறையில் கடத்தி வந்த விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்றையதினம் (13) விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் (Dubai) இருந்து இந்தியாவின் (India) மும்பைக்கு சென்றிருந்த அவர், அங்கிருந்து இன்று மதியம் 12.10 மணியளவில் இண்டிகோ விமானம் 6E 1185 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

சந்தேகநபர் நீர்கொழும்பில் (Negombo) வசிக்கும் 37 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது கால்சட்டையின் இடுப்புப் பகுதியில் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கிலோ 460 கிராம் தங்கப் பொடியுடன் அவர் வந்துள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் சுங்க பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version