Home முக்கியச் செய்திகள் யாழில் பலரின் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி – சென்.ஜோன்ஸ் பழைய மாணவர்களின் செயல்

யாழில் பலரின் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி – சென்.ஜோன்ஸ் பழைய மாணவர்களின் செயல்

0

யாழ்ப்பாணத்தின் (Jaffna) மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக நடந்த மாட்டுவண்டி பவனி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த மாட்டுவண்டி பவனி நேற்றைய தினம் (2.2.2025) சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் (St. John’s College, Jaffna) பழைய மாணவர் ஒன்றுகூடலின் போது, 2010ஆம்
ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த மாட்டுவண்டி பவனி
நடைபெற்றுள்ளது.

வீதியில் சென்ற மக்கள் மகிழ்ச்சி

பவனியில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகளை சுற்றி பவனியாக வலம்
வந்தபோது வீதியில் சென்ற மக்கள் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு உற்சாகமூட்டுவதை
அவதானிக்க முடிந்தது.

தமிழர்களின் பாரம்பரியத்தை பேணிக்காப்பதற்கு இவ்வாறான
செயற்பாடுகளின் ஈடுபடுகின்ற பழைய மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி
வருகின்றனர்.

செய்திகள் – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version