Home இலங்கை சமூகம் நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த தாயின் துயர முடிவு

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த தாயின் துயர முடிவு

0

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான அமுடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த ரொபேட் ராஜ்குமார் ஆன் சுகாசினி (வயது 43) என்ற இரண்டு பிள்ளைகளின்
தாயாரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் சினேகிதி ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு செலவழிப்பதற்கு பணம் தேவைப்படுவதால் அடகு வைப்பதற்கு என 25 பவுண் நகையை வாங்கியுள்ளார்.

தொடர் ஏமாற்றம்

இருப்பினும் அவர் அந்த நகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினமும் அந்த நகையை நண்பியிடம் கேட்டுள்ளார். அவர் அந்த நகையை வழங்க மறுக்க மனவிரக்தியில் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில், இளவாலை காவல்துறையினர் சாட்சிகளை நெறிப்படுத்தியுள்ளனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

NO COMMENTS

Exit mobile version