நீதித்துறை சார்ந்த நீதிபதிகள் உள்ளிட்ட பெருமளவானோருக்கு ஒரே தடவையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் நீதவான்கள், மேலதிக நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள், மேலதிக மாவட்ட நீதிபதிகள் மற்றும் பதிவாளர்கள் உட்பட 106 நீதித்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம்
செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் அவர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், நீதித்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 17 பேர் குறித்த இடமாற்றங்களின் கீழ் நீதவான்களாகவும் மேலதிக மாவட்ட நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
