Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் நடந்த துயரம்: இளைஞன் உயிரிழப்பில் சந்தேகம்!

தமிழர் பகுதியில் நடந்த துயரம்: இளைஞன் உயிரிழப்பில் சந்தேகம்!

0

திருகோணமலையில் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக சம்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சேனையூர் 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த வி.விதுர்சன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்று (13) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கருங்கற்களை ஏற்றிச் செல்கின்ற டிப்பர் வாகனமே மோதியுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒரு டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்ட நிலையில் அதன் சாரதி சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பூர் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணை

சடலம் தற்போது மூதூர் தளவைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது விபத்து தொடர்பான விசாரணையை சம்பூர் காவல்துறையினர் மேற்கொள்கின்றனர்.

மரணமடைந்தவர் பிறவிகுறைபாடு உடையவர் என்பதுடன் இறந்தவரின் சகோதரரும் சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான நிலையில் மரணமடைந்நதாக சம்பூர் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version