Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் எரிந்து சாம்பலான வீடு

தமிழர் பகுதியில் எரிந்து சாம்பலான வீடு

0

திருகோணமலை (Trincomalee) – தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

குறித்த இந்த சம்பவம் இன்று (04.09.2024) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரனை

சம்பவம் தொடர்பில மேலும் தெரியவருகையில், மின் ஒழுக்கு ஏற்பட்டதால் தீச் சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் வீட்டில் வாடகைக்காக இருந்த நபர்களின் உபகரணங்களே இவ்வாறு தீப்பற்றி நாசமாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு மீரா நகர் கிராம சேவையாளர் சென்று களநிலவரங்களை அறிந்து கொண்டதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version