திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கடைகள், ஆலயத்தின் தன்மையை பேணுவதில் பெரும் இடையூறாக இருப்பதாக சமூக செயற்பாட்டாளர் கேசிகன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில் சமூக செயற்பாட்டாளர் கேசிகன், இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், எந்த ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.
குறித்த கடைகள், அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ளமை சட்ட ரீதியானதாக இல்லை. ஆக்கிரமிப்பின் வடிவமாக தான் அந்த கடைகளை பார்க்க முடிகின்றது.
இன்னும் அந்த கடைகள், ஆலய வளாகத்தில் இருப்பது அங்கு வரும் பக்தர்களுக்கு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக தான் இருக்கின்றது” என கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
