Home இலங்கை குற்றம் யாழ். மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ். மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் கைது

0

 யாழ்.(Jaffna) வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று (30.04.2024) இடம்பெற்றுள்ளது.

குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸாருக்கு சட்டத்தரணிகள் இடையூறு செய்யக் கூடாது: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கைது நடவடிக்கை

சட்டவிரோத கடற்றொழில் முறையைப் பயன்படுத்தி கணவாய் மீன் பிடிப்பதற்கான ஆயத்தங்களுடன்  படகில் ஏற்றிச்சென்ற போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தாளையடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version