கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புளியம்பொக்கனை துவரை ஆறு பகுதியில்
சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கடந்த 20ஆம் திகதி கைது
செய்யப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிந்து 110 லீட்டர்
கசிப்பும், 524 லீட்டர் கோடாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது
செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (21.08.2025) கிளிநொச்சி நீதிமன்றில்
முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
டி.எம்.திஷா நாயக்க தெரிவித்துள்ளார்.
