Home இலங்கை குற்றம் அனலைதீவு கடலில் வைத்து கஞ்சாவுடன் இருவர் கைது

அனலைதீவு கடலில் வைத்து கஞ்சாவுடன் இருவர் கைது

0

யாழ்ப்பாணம் (Jaffna) அனலைதீவு கடற்பகுதியில் வைத்து இன்றையதினம் (03) 211 கிலோ 300 கிராம் எடையுடைய
கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கேரளக் கஞ்சாவினை எடுத்து வந்தவர்களிடம், கடற்பகுதியில்
வைத்து கைமாறி வாங்கி வரும்போது அதிகாலை 4.00 மணியளவில்
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை

கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை மற்றும் காரைநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என
தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் பின்னர் அவர்களை பொலிஸாரிடம்
ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version