Home இலங்கை குற்றம் யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

0

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு இடங்களில் ஐஸ்
போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூளாய் – வேரம் பகுதியில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2 கிராம்
100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பாடசாலை
மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்பவர் என தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை

அத்துடன் பொன்னாலை தெற்கு, சுழிபுரம் பகுதியில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர்
2 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு கைது நடவடிக்கைகளும் வட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version