Home இலங்கை சமூகம் சாவகச்சேரி வைத்திய சாலை விடயத்தில் எட்டப்பட்டுள்ள இரண்டு முடிவுகள்

சாவகச்சேரி வைத்திய சாலை விடயத்தில் எட்டப்பட்டுள்ள இரண்டு முடிவுகள்

0

யாழில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தில் இரண்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவக்கச்சேரி மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

விசாரணை செய்தல் மற்றும், நடவடிக்கை எடுத்தல் என்பன பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனினும், சேவை பெறுனர்களின் நலன் முக்கியமானது  எனவும் மருத்துவர் சங்கம் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளின் அடிப்படையில்,  முதலாவதாக வைத்தியர் அர்சுனாவின் சேவையை  நீடிக்க விட்டு ஒரு கால அவகாசம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். ஆனால் தனிப்பகை தீர்ப்பதாக இருக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. 

இரண்டாவதாக அனைவரும் விரும்பாவிடில் வைத்தியர் அர்ச்சுனாவை மீள அனுப்புவது தொடர்பிலும், வேறு ஒருவரை நியமித்த பின்னும் அவரது குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பதிவுசெய்து நோயாளர்கள் பிரதேச மக்கள் ஆகியோர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பெறுவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவை அனைத்துக்குமான சுயாதீன விசாரணை செய்து உண்மைகள் இருப்பின் உரியவர்கள் தண்டிக்கப்பட்டு மக்களுக்கு உண்மை தெரியப்படுத்தப்படவேண்டும் எனவும் மருத்துவர் சங்கத்தினால் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சாவகச்சேரி வைத்தியர்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், 

Source: https://tamilwin.com/article/two-decisions-on-chavakacheri-medical-road-issue-1720258396

NO COMMENTS

Exit mobile version