வடகிழக்கு பிரான்சில்(france) உள்ள ஒரு விமான தளத்திற்கு அருகில் நேற்று (26)செவ்வாய்க்கிழமை பிரெஞ்சு விமானப்படையின் இரண்டு ஜெட் விமானங்கள் பயங்கரமாக மோதியதில் மூன்று பேர் “நினைவிழந்ததாக” அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பிரான்சில் உள்ள செயிண்ட்-டிசியருக்கு மேற்கே உள்ள ஒரு விமான தளத்திற்கு அருகில் இந்த ஜெட் விமானங்கள் மோதியதாகக் கருதப்படுகிறது என்று பிரெஞ்சு விமான மற்றும் விண்வெளிப் படை AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் இராணுவம் வெளியிட்ட தகவல்
இராணுவத்தின் கூற்றுப்படி, மூன்று பேர் – இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பயணி – வெளியேற்றப்பட்டு “நினைவிழந்தமை” கண்டறியப்பட்டது.
ஒரு விமானம் கீழே மோதியதால் தீப்பிடித்தது.
பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை.
உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி
ரஷ்யா(russia) உக்ரைன்(ukraine) மீது படையெடுத்த பிறகு, உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க பிரான்ஸ் இலகுரக ஆல்பா இரட்டை எஞ்சின் விமானத்தைப் பயன்படுத்தி வருகிறது.
ஓகஸ்ட் 2024 இல், கிழக்கு பிரான்சில் நடுவானில் ரஃபேல் ஜெட் விமானங்கள் மோதியதில் இரண்டு பிரெஞ்சு விமானிகள் இறந்தனர்.
https://www.youtube.com/embed/CU5Bf37FxWw
