Home இலங்கை அரசியல் அனுர குமாரவின் சுவரொட்டிகளை ஒட்டியவர்களுக்கு நேர்ந்த நிலை

அனுர குமாரவின் சுவரொட்டிகளை ஒட்டியவர்களுக்கு நேர்ந்த நிலை

0

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின்(anura kumara dissanayaka) சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருந்துவத்தை காவல்துறையினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுவரொட்டிகளை ஒட்டியபோது கைது

ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறி .அனுரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிய போதே இந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, சந்தேகநபர்கள் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு அவர்களுக்கு 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தடை

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதையும் மீறி ஒட்டினால் அவர்கள் கைது செய்யப்படுவர்.

இதேவேளை ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்து அகற்றுவதற்கு ஊதிய அடிப்படையில் நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/two-people-anura-s-posters-were-arrested-1724691973

NO COMMENTS

Exit mobile version