Home இலங்கை சமூகம் சட்டவிரோத கிருமிநாசினிகளுடன் இருவர் கைது

சட்டவிரோத கிருமிநாசினிகளுடன் இருவர் கைது

0

புத்தளம் (Puttalam) – உச்சமுனை தீவுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை கிருமி நாசினிகள் கடற்படையினரால் ( Sri Lanka Navy)  கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால் குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிருமி நாசினிகள்

இதன்போது,இயந்திர படகில் 11 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் பெரும் எண்ணிக்கையிலான கிருமி நாசினிகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக எடுத்து வரப்பட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இயந்திர படகில் இருந்த இருவர் சந்தேகத்தின் பெயரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கிருமி நாசினிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/two-people-arrested-with-illegal-disinfectants-1726758903

NO COMMENTS

Exit mobile version