Home இலங்கை சமூகம் தொடரும் யானைகளின் அட்டகாசம்: பரிதாபமாக உயிரிழந்த இருவர்

தொடரும் யானைகளின் அட்டகாசம்: பரிதாபமாக உயிரிழந்த இருவர்

0

அம்பாறையில் (Ampara) காட்டுயானை தாக்கி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர் (Nintavur) இரண்டாம் குறுக்குத் தெரு பிரிவை சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

இந்நிலையில், சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம், சடலம் மீதான மரண விசாரணையை அப்துல் ஹமீட் அல்-ஜவாஹிர் (Abdul Hameed Al-Zawahir) மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் (27) மணல் அகழ்வு வேலைக்கு சென்ற நிலையில் யானையினால் தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் நிந்தவூர் 21 ஆம் பிரிவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த காலங்களில் சம்மாந்துறை (Sammanthurai) பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ள நிலையில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்க உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version