Home இலங்கை சமூகம் இரண்டு பாடசாலை மாணவர்கள் மாயம் : தேடுதல்கள் தீவிரம்

இரண்டு பாடசாலை மாணவர்கள் மாயம் : தேடுதல்கள் தீவிரம்

0

ராகம காவல்துறை பிரிவில் வசிக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர்.

ராகம படுவத்த பிரதேசத்தில் வசிக்கும் நண்பர்களான பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர்.

 காணாமல் போயுள்ளனர்

இலக்கம் 485/B/S நாரங்கொடபலுவ ராகமவில் வசிக்கும் ஆர். எம். சேத் மணித்து (11) மற்றும் எண். 487/D/S முகவரியில் வசிக்கும் எஸ். ஏ. இ. ஓஷதா இந்திரா (13) என்ற பாடசாலை மாணவர்களே காணாமல் போயுள்ளனர்.

இருவரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளதாக ஒரு மாணவனின் தாயும் மற்றைய மாணவனின் பாட்டியும் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம காவல் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நோர்வூட் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியிலும் நான்கு தமிழ் மாணவர்கள் காணாமற் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version