Home உலகம் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : கருங்கடலில் பிளந்த எண்ணெய் கப்பல்கள்

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : கருங்கடலில் பிளந்த எண்ணெய் கப்பல்கள்

0

 ரஷ்யாவின் (russia)இரண்டு எண்ணெய் கப்பல்கள் கருங்கடலில் விபத்துக்குள்ளாகி பிளவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிளவடைந்துள்ள கப்பல்களில் இருந்து கசிந்த எண்யெண் கடலில் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடும் புயலுக்கு மத்தியில் முதலாவது கப்பல் பிளவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இரண்டு கப்பல்களிலும் சேர்த்து 29 பணியாளர்கள் இருந்துள்ளனர்.இதில் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

இரண்டாவது கப்பல் கரையொதுங்கி இருக்கலாம்

இரண்டாவது கப்பல் சேதமடைந்த நிலையிலும் அவ்விடத்தை விட்டு நகர்ந்துள்ளதாகவும் அது கரையொதுங்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

2014 இல் மொஸ்கோவால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட உக்ரைனிய தீபகற்பமான கிரிமியாவிலிருந்து ரஷ்யாவை பிரிக்கும் கெர்ச் ஜலசந்தியில் இந்த சம்பவம் நடந்தது.

விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்ட புடின்

ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin ), துணைப் பிரதமர் விட்டலி சவேலியேவ் (Vitaly Savelyev )தலைமையில் இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார் .மேலும் அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஷ்யாவின் அவசர சேவையானது இழுவை படகுகள் மற்றும் மில் எம்ஐ-8 உலங்கு வானூர்திகளை உள்ளடக்கிய 50 பேர்கொண்ட மீட்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. 

Source: https://ibctamil.com/article/two-russian-oil-tankers-wrecked-in-black-sea-1734287200

NO COMMENTS

Exit mobile version