யாழ்ப்பாணத்தில் நேற்றும் (11) இன்றும்(12) என இருவேறு பரிதாப மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இதன்படி பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக
உயிரிழந்துள்ளது.
நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியை சேர்ந்த கவிநாத் பூஜிதா
என்ற தம்பதிகளின் முதல் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நான்கு நாட்களேயான குழந்தை
குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
பிறந்துள்ளது. இவ்வாறு பிறந்த குழந்தை நேற்றையதினம் (11) திடீரென
உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார்
நெறிப்படுத்தினர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு
இதனிடையே யாழில் வயோதிபப் பெண் ஒருவர் இன்றையதினம் (12) கிணற்றில் தவறி விழுந்து
உயிரிழந்துள்ளார்.
தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி
சீதாலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் இன்று காலை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தவேளை தவறி விழுந்து
உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் நெறிப்படுத்தினர்.
