Home இலங்கை குற்றம் கொழும்பில் பாதாள உலகக்கும்பலை சேர்ந்த இருவர் கைது

கொழும்பில் பாதாள உலகக்கும்பலை சேர்ந்த இருவர் கைது

0

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பாதாள உலக கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 1,763 பேர் கைது 

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் பொரள்ளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 1,763 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

 

Source: https://tamilwin.com/article/two-underworld-gang-members-arrested-in-colombo-1719024375

NO COMMENTS

Exit mobile version