Home இலங்கை குற்றம் பாதாள உலகக் கும்பலை சேர்ந்த இருவர் கைது

பாதாள உலகக் கும்பலை சேர்ந்த இருவர் கைது

0

பிரபல பாதாள உலகக்கும்பல் தலைவனான தெமட்டகொட சமிந்தவின் பெயரைப் பயன்படுத்தி வர்த்தகர்களிடம் கப்பம் கோரிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை தெய்யந்தர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கைது

குறித்த இருவரும் முக்கிய வர்த்தகர்கள் பலரிடம் தெமட்டகொட சமிந்தவின் பெயரைப் பயன்படுத்தி கப்பம் கோருவதாக பொலிஸ் நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதன் பேரில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து உள்நாட்டு தயாரிப்பான இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Source: https://tamilwin.com/article/two-underworld-gangs-arrested-1742653957

NO COMMENTS

Exit mobile version