மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200
கிராம் செம்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இன்று(10.05.2025) குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை மாவட்ட குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவே கைது செய்துள்ளது.
மேலதிக நடவடிக்கைகள்
இந்நிலையில், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
