Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் மின்சார தாக்குதலுக்குள்ளான இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவில் மின்சார தாக்குதலுக்குள்ளான இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி

0

முல்லைத்தீவு(Mullaitivu) புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்
மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (26.06.2024) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக சிகிச்சை

புதுக்குடியிருப்பு சந்தி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்
பணிபுரியும் ஊழியர்கள் இருவர் குறித்த நிறுவனத்தின் தண்ணீர் தொட்டியினை
சுத்திகரிக்க கட்டட மேல்பகுதிக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளனர்.

மேலே சென்றவர்களை காணவில்லை என அருகில்
உள்ள கடையில் பணிபுரியும் ஊழியர் கட்டட மேற்பகுதிக்கு சென்றபோது அந்த இரு இளைஞர்களும் மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து தூக்கி (தரையில்) கீழே
வீசப்பட்டுள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக
புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வேணாவில் மற்றும் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை
சேர்ந்த 20 வயதுடைய இரு இளைஞர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version