Home இலங்கை அரசியல் சஜித்தின் உத்தரவாதம் சுமந்திரனுக்கானதா அல்லது தமிழ் மக்களுக்கானதா: தமிழ் தொழிலதிபர் கேள்வி

சஜித்தின் உத்தரவாதம் சுமந்திரனுக்கானதா அல்லது தமிழ் மக்களுக்கானதா: தமிழ் தொழிலதிபர் கேள்வி

0

வடக்கில் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வழங்கிய உத்தரவாதம் சுமந்திரனுக்கானதா? அல்லது தமிழ் மக்களுக்கானதா என்பதை சுமந்திரன் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என தொழிலதிபரும், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் (Lankasri) “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு – கிழக்கை சார்ந்த தமிழர் பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் இவ்வாறானதொரு பங்களிப்பு குறித்து ஒரு சிறந்த திட்டமிடலுடன் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாக நிற்கின்றது.

தமிழர் பகுதிகளில் முதலீடுகளையோ அல்லது வேலைவாய்ப்புக்களையோ மையப்படுத்திய ஒரு கட்டமைப்பு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இது வரை காலமும் இல்லாமைக்கான காரணம் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

அந்தவகையில், ஈழத்தேசத்தின் சாதனையாளரான தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் இவ்வாறானதொரு சூழல் குறித்த நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டவற்றுடன் இன்றைய லங்காசிறியின் ஆயிரமாவது ஊடறுப்பு நிகழ்ச்சி, 

Source: https://ibctamil.com/article/udaruppu-1000-chapter-lankasri-baskaran-kandiah-1726153437

NO COMMENTS

Exit mobile version