Home இலங்கை பொருளாதாரம் உண்டியல் முறையில் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிறுவனங்களுக்கான அறிவிப்பு

உண்டியல் முறையில் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிறுவனங்களுக்கான அறிவிப்பு

0

உண்டியல் முறையில் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த நிறுவனங்கள் மத்திய வங்கியின் கீழ் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்டியல் முறை

சமூக ஊடக கணக்கில் பதிவொன்றின் மூலம், பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் சட்டவிரோதமான நிறுவனங்களாக அடையாளப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான சட்டங்களை மத்திய வங்கி கடந்த ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version