பெந்தர நதியில் மிதந்த அடையாளம் தெரியாத ஒருவரின் சடலத்தை அளுத்கம காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் சடலம் பல நாட்களாக பெந்தர நதியில் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
