Home இலங்கை சமூகம் 75 நாட்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்! வெளியான அறிவிப்பு

75 நாட்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்! வெளியான அறிவிப்பு

0

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று (15) முதல் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (University Grants Commission) தலைவர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தினர் கடந்த 75 நாட்களாக இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர் வேலை நிறுத்தம்

இதேவேளை, தமது கோரிக்கைகளை அமைச்சரவையில் சமர்ப்பித்து தீர்வுகளை வழங்குவதாக போக்குவரத்து அமைச்சர் வழங்கிய வாக்குறுதி இன்று நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது சங்கம் நாளை (16) கூடி இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version