Home இலங்கை குற்றம் போதைப் பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது!

போதைப் பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது!

0

மூதூர்- நெய்தல்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து
பல்கலைகழக மாணவரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(25) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பல்கலைக்கழக மாணவனிடமிருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்
பொருள், மூன்று கையடக்க தொலைபேசிகள், வங்கி புத்தகமொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

கைது நடவடிக்கை

மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்
அடிப்படையில் மூதூர் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை
மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூதூர் பொலிஸார் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version