Home இலங்கை குற்றம் பல்கலைக்கழக மாணவனின் மரணம் குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்

பல்கலைக்கழக மாணவனின் மரணம் குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்

0

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கற்ற மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமை தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான சரித் தில்ஷான் என்ற மாணவன் உயிரை மாய்த்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

எனினும் இந்த காரணத்தை பொலிஸ் விசாரணைகளால் உறுதியாக வெளிப்படுத்தப்படவில்லை. பகிடிவதையால் ஏற்பட்ட மரணம் என இதுவரை உறுதிப்படுத்தவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பகிடிவதை 

குறித்த மாணவன் உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதியுள்ளார் எனவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும எனவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள், குறித்த மாணவின் ஆடைகள் களையப்பட்டு பகிடிவதை மேற்கொள்ளப்பட்டமையினால் மன விரக்கி காரணமாக, மாணவன் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version