Home இலங்கை இலங்கையில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் முன்னணி போர்கப்பல்!

இலங்கையில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் முன்னணி போர்கப்பல்!

0

அமெரிக்க கடற்படையின் சாண்டா பார்பரா கப்பல் (LCS 32) இன்று (16) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கப்பலின் விநியோகம் மற்றும் பராமரிப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தபோது இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய மரியாதை வழங்கப்பட்டது.

 

விஜயத்தின் முடிவு

சாண்டா பார்பரா என்பது அமெரிக்க 7ஆம் கடற்படை பிரிவுக்குச் சேர்ந்த Littoral Combat வகை கப்பலாகும். கப்பலின் நீளம் 127.6 மீட்டர். இதனை கமாண்டர் ஏ.ஜே. ஓஎச் கட்டுப்படுத்துகிறார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் கப்பலின் குழுவினருக்கு நாட்டின் முக்கிய இடங்களை பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.

கடற்படையின் தகவலின்படி, சாண்டா பார்பரா கப்பல் தனது அதிகாரப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் ஓகஸ்ட் 22ஆம் திகதி இலங்கையை விட்டு புறப்பட உள்ளது.

Source: https://ibctamil.com/article/us-navy-combat-ship-uss-santa-barbara-arrived-1755342333

NO COMMENTS

Exit mobile version