Home இலங்கை சமூகம் தினமும் துளசி இலைகளை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா

தினமும் துளசி இலைகளை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா

0

துளசிக்கு என்று பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்து கிடப்பதால் தான் மக்கள் அதை பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.

துளசி இலைகளை தேனீர், சூப், துளசி தண்ணீர் என எந்த வகையில் சாப்பிட்டாலும் பலன்கள் நிச்சயம்.

ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை பச்சையாக சாப்பிடும் போது நன்மைகள் பலமடங்கு அதிகமாக கிடைக்கும்.

​மன அழுத்தத்தை போக்கும்

துளசி இலைகளில் அடாப்டோஜன்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் உடலில் உள்ள மனஅழுத்த அளவைக் குறைக்க உதவும்.

இது உங்கள் நரம்பு மண்டலத்தை தளர்த்த உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

இது புலன்களை அமைதிப்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதில் பங்களிக்கிறது.

தலை வலி

உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா?

ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி.

அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.

​இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது 

துளசியில் கணைய உயிரணுக்களின் செயல்பாட்டை ஆதரிக்கும் மூலக்கூறுகள் உள்ளன.

இது இன்சுலினை மேலும் வெளியிடுகிறது. எனவே இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

துளசி கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தை எளிதாக்குகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.

​சரும ஆரோக்கியம்

நீங்கள் வெறும் வயிற்றில் துளசியை உட்கொள்ளும் போது அது உங்கள் இரத்தத்திலிருந்து நச்சுகளை வெளியேற்றி நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.

முகப்பரு மற்றும் சரும கறைகளின் தோற்றத்தை குறைக்கிறது, இது உங்களுக்கு குறைபாடற்ற சருமத்தை அளிக்கிறது.

இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உங்க சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. சருமழகை மேம்படுத்துகிறது.

புற்று நோய் எதிர்ப்பு சக்தி

துளசிக்கு புற்று நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. துளசி இலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் புற்றுநோயைத் தடுக்கலாம்.

சளி மற்றும் இருமல் போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சனைகளுக்கு துளசி சிகிச்சை அளிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் துளசி இலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே இதை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

NO COMMENTS

Exit mobile version