வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை தீருவிலில் வழமை போன்று இம்முறையும் மாவீரர்
நினைவேந்தல் நிகழ்வுகள் பெரும் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
பலத்த காற்றுக்கும் மழைக்கும் மத்தியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து
மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
